பசுர குடிநீர், 15 வகையான மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு சித்த மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்குவது துவங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, 'மக்கள் ஊரடங்கு' உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.'சளி, காய்ச்சல், இருமல் வராமல் தடுத்தால், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம்; அதற்கு, கபசுர குடிநீர் கை கொடுக்கிறது' என, சித்தமருத்துவர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பான செய்தி, நம் நாளிதழில், 16ம் தேதி வெளியானது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள, சித்த மருத்துவ அலுவலர்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு இலவசமாக, கபசுர குடிநீர் வழங்கும் பணி துவங்கியுள்ளது.


கபசுர குடிநீர், 15 வகையான மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்கள், கபசுர குடிநீரை, இலவசமாக பெற்றுக் கொள்ளும்படி, அரசு சித்த மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பான, துண்டு பிரசுரங்களும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.